இதையடுத்து, குழந்தைகளுக்குப் பிடிக்கும் மிருகக்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகிறேன். சீனாவில் முதலாவது தேசிய நிலை காட்டு விலங்கு மிருகக்காட்சியாகம் ஷாங்காய் மாநகரில் உள்ளது. ஆண்டுதோறும், ஷாங்காய் காட்டு விலங்கு மிருகக்காட்சியகத்தின் குடும்பத்தில் வெவ்வேறான விலங்குகள் புதிதாக சேர்க்கப்பட்டு வருகின்றன. விலங்குகளைக் காணும் போது, அதிகமான மகிழ்ச்சி அங்கு கிடைக்கலாம். மான்கள் புல்வெளியில் அலைந்து திரிந்து புற்களை மேய்வதையும் கண்டுரசிக்கலாம். அழகான ஃபிளமிங்கோ பறவை நீரில் விளையாடுவதைப் பார்வையிடலாம். அன்பான பாண்டா மூங்கில் இலையைச் சாப்பிடுவதைக் கண்டுமகிழலாம். அதுமட்டுமல்ல, விலங்கு அரங்கேற்ற நிகழ்ச்சிகள் பலவற்றையும் பார்வையிடலாம். அவற்றில் கடல் சிங்கத்தின் அரங்கேற்றத்தை நீங்கள் தவறவிட கூடாது. நேரம் காலை 10முதல் மாலை 3:15 வரை. குழந்தையுடன் பயணம் மேற்கொண்டால், கண்டிப்பாக ஷாங்காய் காட்டு விலங்கு மிருகக்காட்சியகத்துக்கு வாருங்கள். நுழைவுச்சீட்டு 120யுவான். 2இலக்க சுற்றுலா பேருந்து மூலம் மிருகக்காட்சியகத்தை நேரடியாகச் சென்றடையலாம். விலங்குகளுடன் நெருக்கமாக விளையாட, நீங்கள் தயாரா?
காட்டு விலங்குகள் மட்டுமல்ல, கடல் விலங்குகளையும் ஷாங்காய் மாநகரில் பார்வையிடலாம். பூடுவோ பிரதேசத்திலுள்ள ஜான் ஃபூன் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா நீர் மற்றும் மலையால் சூழப்பட்டுள்ளது. முதலில் பூங்காவின் இயற்கை மற்றும் செயற்கைக் காட்சிகளைக் கண்டுரசிக்கலாம். அடுத்து, இப்பூங்காவிலுள்ள தாயாங் கடலுலகத்தைத் தவறவிடக் கூடாது. ஏரியின் கீழே இந்த தாயாங் கடலுலகம் அமைந்துள்ளது. பத்து ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இந்த கடலுலகம் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு பெரிய மாளிகை போல இருக்கும். திமிங்கிலம் அரங்கத்தில் அரங்கேற்றத்தைக் கண்டுமகிழலாம். கண்ணாடி கப்பலில் அச்சுறுத்தலை அளிக்க கூடிய சுறாமீனை நேரடியாகவும் நெருக்கமாகவும் பார்வையிடலாம். அதுமட்டுமல்லாமல், குளத்தில் உங்களுக்குப் பிடித்திருக்கும் கடல் விலங்குகளை நேரடியாக கைகளால் தொடவும் முடியும். எப்படி? ஆர்வம் இருக்கிறதா?2, 3 அல்லது 4இலக்க சுரங்கத் தொடர்வண்டி மூலம் ஜான் ஃபூன் பூங்காவுக்குள் செல்வதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. ஆனால் கடலுலகத்துக்கான நுழைவுச்சீட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 130யுவானாகும்.