இச்சிறுநகர் நான்கு திசைகளிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. 900க்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்தாலும், நீர் நகரான சிறப்பை சோச்சுவாங் நன்றாகப் பேணிக்காத்து வருகிறது. நகரிலுள்ள 60விழுக்காட்டுக்கும் மேலான குடியிருப்புகள் மிங் மற்றும் ஜிங் வம்சக் காலப் பாணியுடைவை. மேலும், இச்சிறுநகரில் 14 தனிச்சிறப்பு மிக்க பழைய பாலங்கள் செவ்வனே பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. படகில் பயணம் மேற்கொண்டு சோச்சுவாங் வின் சிறப்பான காட்சியைக் கண்டுரசிப்பது தலைசிறந்த தேர்வாகும்.
சோச்சுவாங்கின் கைவினைப் பொருட்கள் ரொம்ப புகழ் பெற்றது. அவற்றில் தேனீர் குடுவை முன்னிலை வகிக்கிறது.. சோச்சுவாங்கின் தேனீர் குடுவை மிகவும் சிறப்பானது. வேறு இடங்களில், தேனீர் குடுவை பொதுவாக மண்ணால் அல்லது பீங்கான் பாண்டத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும். ஆனால், சோச்சுவாங்கின் தேனீர் குடுவை கல்லால் செய்யப்பட்டது. குடுவையில் உயிர்த்துடிப்புடனான செதுக்கிய வடிவங்கள் இருக்கும். தேனீரை விரும்பும் நண்பர்கள் அங்குள்ள சிறப்புக் குடுவையைத் தவறவிடக் கூடாது. சீனாவின் முதலாவது நீர் நகரில் பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வந்தாயிற்றா?