அந்த ஆண்டின் வசந்த விழாவுக்குப் பின்பு, மன்னர் லியூபை ஒரு நல்ல தினத்தைத் தேர்ந்தெடுத்து ஷுகேலியாங்கின் வீட்டுக்கு மறுபடியும் வந்தார். அப்போது, ஷுகேலியாங் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பவில்லை. மன்னர் வீட்டின் வாசலில் நின்று காத்திருந்தார். நீண்டநேரத்துக்குப் பின்பு தான், ஷுகேலியாங் விழித்தெழுந்தார். உலகத்தை எப்படி அமைதியாக ஆட்சி புரியலாம் என்று மன்னர் ஆலோசனை கேட்டார். ஷுகேலியாங் தலைசிறந்த முன்மொழிவு அளித்தார். மன்னருக்கு உதவி புரியவும் சம்மதம் தெரிவித்தார். அப்போது, ஷுகேலியாங்க்கு 27வயது. san gu mao lu என்ற பழமொழி பொருள் என்ன உங்களுக்குத் தெரிந்ததா?அதாவது, திறமைசாலியின் அறிவை நாடி திரும்பத் திரும்ப செல்வது ஷுகேலியாங் மற்றும் லியூபை ஆகிய இருவருக்குமிடையே மன்னர் அதிகாரி என்ற உறவைத் தாண்டி, சகோதர்களைப் போல அவர்கள் பழகினர். மன்னர் லியூபை நோய் வாய்பட்டு உயிரிழந்தார். அப்போது, அவர் ஷுகேலியாங்கிடம் கூறுகையில் உங்களுக்கு அளவுக்கு மீறிய திறன் உள்ளது. இளவரசனுக்குத் திறன் இல்லாமல் இருந்தால், அவருக்கு உதவியளிக்க வேண்டாம். நீங்கள் சுதந்திரமாகப் போகலாம் என்றார். ஷுகேலியாங் மனமுருகி அழுதார். தன்னால் இயன்ற அளவில் உதவியளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அதனாலே, இளவரசர் ஷுகேலியாங்கை தனது தந்தையாக கருதி உரிய மதிப்பளித்து வந்தார்.