இக்கோயிலுக்குப் பின்பு, ஷுகேலியாங்கின் கோயிலாகும். நடுப்பகுதியில், ஷுகேலியாங் அவரின் மகன், மற்றும் பேரனின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இம்மூவரும் நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உருவச்சிலைக்கு முன்பு மூன்று முரசுகள் உள்ளன. ஷுகேலியாங்கால் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிற்றது.
கோடைக்காலத்தில் காலை 7:30முதல் இரவு 9 மணி வரையாலும், குளிர்காலத்தில் காலை 8முதல் மாலை 6:30மணி வரையாலும் இக்கோயில் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படுகிறது. வயது வந்தவருக்கான நுழைவுச்சீட்டு 60யுவானாகும். மாணவருக்கான நுழைவுச்சீட்டு 30யுவான்.
எப்படி, நண்பர்களே, வுஹோஸி கோயில் பற்றிய எனது அறிமுகம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? இறுதியில், ஷுகேலியாங் அவரின் ஒரு பொன்மொழியை தமிழிலே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புகழையும் செல்வத்தையும் பொருட்படுத்தாமல் இருந்தால் மட்டுமே, உனது உண்மையான ஆசையை அடைய முடியும். அமைதியான மனத்துடன் மட்டுமே அந்த ஆசையை நனவாக்க முடியும்.