கடும் களைப்பு மற்றும் பிணி ஆகிய காரணங்களால் 54வயதான போது, ஷுகேலியாங் இயற்கை எய்தினார். தலைமை அமைச்சரான அவருக்கு நிறைய உடைமைகள் இல்லை. சவப்பெட்டியைப் புதைக்கும் இடம் மட்டும் இருந்தால் போதும் என்று உயிரிழக்கும் போது அவர் கூறினார்.
சீனாவின் மூன்று நாட்டுக் காலத்தின் அருங்காட்சியகமாகவும் வுஹோஸி கோயில் விளங்குகிறது. ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பயணிகள் இக்கோயிலில் பயணம் மேற்கொண்டு முந்தைய வரலாற்றை அறிந்து வருகின்றனர்.
லியூபை கோயில் வுஹோஸி கோயிலில் முக்கியமான காட்சித்தலங்களில் ஒன்றாகும். நடுப்பகுதியில், 3 மீட்டர் உயரான லியூபையின் தங்க உருவச்சிலை உள்ளது. இரு பக்கங்களிலும், அவரின் புகழ் பெற்ற அதிகாரிகளின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை எல்லாம் உயிர்த்துடிப்புடன் காட்சி அளித்து வருகின்றன.