அவர்கள் நான்கு பேரும் பயணம் மேற்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். குறிப்பாக, மிதிவண்டியில் பயணம் மேற்கொள்வது அவர்களுக்குப் பிடிக்கும். அழகான காட்சியைக் கண்டதும், உடனடியாக நிறுத்திப் புகைப்படமெடுப்பதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்று பாலோவி கூறியதன் மூலம் அறிய முடிகிறது.
பயணத்தின் மூலம், நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவை புத்தகத்திலிருந்து படிக்க இயலாதவை. கோடைகாலத்தின் கடைசி நாள், அவர்கள் ஒன்று கூடி தாலி நகரிலுள்ள எர்ஹெய் ஏரியைப் பார்வையிடப் புறப்பட்டனர். பல்கலைக்கழகத்தின் அருகில் வாடகை மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மேற்கு நெறியின்படி எர்ஹெய் ஏரியைப் பார்க்கச் சுற்றிப் புறப்பட்டனர்.
யார் விரைவாக மிதிவண்டியை ஓட்டுவது என்ற போட்டி அவர்களுக்குள் ஏற்பட்டது. தாலி நகரில், மலையும், நீரும், மணி போன்ற நீலவண்ணமான வானமும், வெள்ளையான சுவர் மற்றும் கறுப்பான கூரையுடைய குடியிருப்பிடமும் அமைந்துள்ளன. பை இனம் தாலி நகரின் முக்கியமான இனமாகும். அஷ்வானி அவர்கள் மிகவும் அதிர்ஷ்டமானவர். அன்று, பை இனத்தின் ஒரு சிறப்பு விழா நடைபெற்றது. மத செயல்பாட்டில் கலந்து கொள்வது அவர்களுக்கு இதுவே முதல்முறையாகும்.