அதுமட்டுமல்லாமல், உலகளவிலும் அது தலைசிறந்த கட்டிடக் கலையாகும். கட்டிடக் கலை மற்றும் மதக் கலை ஒன்றிணைந்த ஒரு அருங்காட்சியகம் போத்தலா மாளிகை தான்.
போத்தலா மாளிகையில் நிறைய தொல் பொருட்கள் நன்கு பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. சாக்கியமுனியின் பிரேதம், நாட்டுப்புற கலைப் பொருட்கள், பௌத்த மத திருமறை, வானியல், மருத்துவியல் உள்ளிட்ட அரிய புத்தகங்கள் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. போத்தலா மாளிகையில் காக்கப்பட்டு வரும் உருவச்சிலைகள், சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தின் நுட்பங்களை ஒன்றிணைத்துள்ளன. அவை எல்லாம், திபெத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. உள்ளூர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் போத்தாலா மாளிகை புத்தர் வசிக்கும் இடமாக கருதுகின்றனர்.
நாள்தோறும், திபெத் மட்டுமல்ல உலகிலிருந்து வரும் பல்வேறு பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் போத்தலா மாளிகைக்குச் சென்று மனமார தொழுதிடுவதைக் காண முடியும். பலரின் மனத்தில் போத்தலா மாளிகை மிகவும் புனிதமானது. மாளிகையைப் பார்வையிட, அனைத்து திபெத் மரபுவழி புத்தமதத்தின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மாளிகையைப் பார்வையும் போது, தொப்பி அணியக் கூடாது. மாளிகைக்குள் புகைப்படமெடுக்கக் கூடாது. வாசற்படியை மிதிக்க கூடாது. மேலும், அனைத்து பயணிகளும் ஒரு மணிநேரத்துக்குள் மாளிகையைப் பார்வையிட்டு முடிக்க வேண்டும். பார்த்து முடித்த பின், போத்தலாவின் மேற்கு வாசலின் மூலம், வெளியே செல்ல வேண்டும்.