செஜியாங் மாநிலம் நீண்ட வரலாறுடையது. சீனப் பண்டைகால நாகரிகத்தின் துவக்க இடமாக அது விளங்குகிறது. செஜியாங் மாநிலம், சீனாவின் தென் கிழக்கின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. நிறைய கடல் வளம் கொண்டுள்ளது. அதனாலே, மீன் மற்றும் அரிசி ஊர் என பாராட்டப்பட்டுள்ளது.
ஹாங்சோ என்பது அதன் மாநில நகரமாகும். அழகு மிக்க காட்சிகளால், புவியிலுள்ள சொர்க்கம் என இந்நகர் அழைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், சொர்க்கமான ஹாங்சோவின் காட்சித்தலங்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறேன்.
சீன பத்து தலைசிறந்த காட்சித்தலங்களில் ஒன்றான சிஹூ ஏரி காட்சித்தலம் ஹாங்சோ நகரில் அமைந்துள்ளது. சீனாவில் சிஹூ ஏரியை அறியாதவர் ஒருவரும் இல்லை. ஒரு புராணக்கதையால், சிஹூ சீனா முழுவதிலும் புகழ் பெற்றுள்ளது. இந்தக் கதையை அறிய நீங்கள் விரும்புகிறீர்களா? கேட்கத் தயாரா?