இந்தியாவின் தனிச்சிறப்பான நகைகள், புதிய வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்தன. கலைநயம் மிக்க அந்த நகைகள் நுகர்வோரின் ஆர்வத்தை மிகவும் ஈர்த்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராமாயானா நகை நிறுவனத்தின் இயக்குநர் சோம்நாத், ஜெய்பூர் நகரில் தயாரிக்கப்பட்ட தனிச்சிறப்பு மிக்க நகைகளை, நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தினார். அவை பெரும்பாலும் கைகளால் உருவாக்கப்பட்டவையாகும். சீன நகை சந்தையின் வளர்ச்சி பற்றி, அவர் கூறியதாவது
"சீன நகை சந்தை மிகவும் விரிவாக இருக்கிறது. சீனாவில் வியபாரம் செய்வதற்கு மகிழ்ச்சியடைகிறோம். இங்கு வணிகம் செய்வது இது மூன்றாவது முறை. ஒவ்வொரு முறை அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளோம்."என்றார் அவர்.