பக்கவாதம், நீரிழிவு ஆகியவற்றை விட இந்தியாவில் பொதுவாக சிறுநீரக நோய் காணப்படுகிறது. ஏறக்குறைய நீரிழிவுக்கு சமமான எண்ணிக்கையில் சிறுநீரக நோயளிகள் உள்ளனர். இந்நோய்க்கான மருத்துவச் சிகிச்சை செலவு நீரிழிவு மற்றும் பக்கவாதத்திற்கு ஆவதை விட பல மடங்கு அதிகம். சிறுநீரிலுள்ள புரத நிலை மற்றும் இரத்தத்திலுள்ள கிரியேட்டின் நிலை ஆகியவற்றை அறியும் மருத்துவ சோதனையை ஆண்டுதோறும் செய்துவந்தால், சிறுநீரக நோய்களை தவிர்த்துவிட முடியும்.
இவ்வாறு நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அதே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளலாம். ஆனால், ஏதாவது சிக்கல்கள் இருப்பதை கண்டறிந்தால், மிக முன்னதாகவே அதற்கான மருந்துகளை உட்கொள்ளவது நல்ல பயனை தரும்.