ரூபாய் நூறுக்கு செய்யப்படும் இந்த மருத்துவப் பரிசோதனை பற்றி அறிந்திருப்போர் மிகவும் குறைவு. தீவிர சிறுநீரக நோய்களுடைய அறுபது விழுக்காடு பேருக்கு நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் தோன்றுகிறது. எனவே, சிறுநீரக நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இந்த மூன்றையும் தடுக்கக்கூடிய இந்த மருத்துவ பரிசோதனை மிக முக்கியமாக தெரிகிறது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் எல்லா குடிமக்களாலும் இந்த மருத்துவ பரிசோதனை செய்ய முடியாவிட்டாலும், அறுபது வயதிற்கு மேலானோருக்கு இந்த பரிசோதனையை செய்து வருவது நன்மை தரும்.
சிறுநீரக கல், தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்தும். சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்றாகி பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப் பாதையில் பல அளவுகளில் கற்களை உருவாகக்கூடும். வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத் தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயத்தழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் நாள்தோறும் உணவில் சேர்த்துவந்தால் சிறுநீரக கல் உருவாகமால் தடுக்க முடியும்.