நாசு பகுதி, வட திபெத்தின் பீடப்பூமியில் அமைந்துள்ளது. திபெத் அமைதி விடுதலை பெறும் முன், நாசு பகுதியில் நவீன அடிப்படை வசதிகள் இல்லை. கோயில் மற்றும் பத்து செங்கற்கள் மட்டும் இருந்தன. இப்போது கூட, நாசு பகுதியில் செங்கல் அதிகம். மழை பெய்யும்போது வெள்ளப் பெருக்கும். நாசு நகர பகுதியிலுள்ள திபெத் சகநாட்டவர்கள் நவீனமயமான வாழ்க்கையை வாழ துணைபுரியும் வகையில், ச்சே சியா மற்றும் லியாவ் நீங் மாநிலங்களின் உதவியில் நாசு நகரப் பகுதியில் நவீன குடியிருப்பிடம் ஒன்று கட்டியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இவ்வாண்டின் ஆகஸ்ட், நாசு பகுதியில் கடும் புயல் மழை பெய்தது. நகர பகுதியிலுள்ள பல வீடுகளில் மழை கசிவு நிகழ்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் நவீன ச்சே சியாங் குடியிருப்பிடத்தில் இடம் பெயர்ந்த திபெத் சகநாட்டவர் தோ ஜீயைப் பொருத்தவரை, அந்த புயல் மழை அவரின் வாழ்க்கையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. புதிய வீடு பற்றி கூறும்போது, தோ ஜீ மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். தற்போது கிடைத்துள்ள வீட்டு சான்றுதாளை அவர் மகிழ்ச்சியோடு செய்தியாளரிடம் காட்டுகிறார்.