பழைய குடியிருப்பிடத்தை மேம்படுத்தும் பணித்திட்டத்தின் படி, முதல் கால கட்டத்தில் மேம்படுத்தப்பட்ட குடியிருப்பிடங்களில் ஒன்றான ச்சே சியாங் குடியிருப்பிடம் 2011ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் கட்டியமைக்கத் துவங்கியுள்ளது. மொத்த கட்டுமான பரப்பளவு சுமார் 2 இலட்சம் சதுர மீட்டராகும். மொத்தம் 1307 வீடுகள் உள்ளன.
முன்பு நாசு மாவட்டத்தில் ஆபத்தான வீடுகள் அதிகம். இப்போது பெரிய சிறந்த வீட்டில் வசிப்பதால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். மக்கள் வசிக்கும் வீடுகளின் நிலையை மேம்படுத்தி, நகரின் அடையாளத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசின் கொள்கைகளால், சில குடும்பங்கள் பணம் செலுத்தாமல் புதிய வீட்டில் குடிபுகுந்துள்ளனர். ச்சே சியாங் குடியிருப்பிடம் பணித்திட்டத்திற்கு பொறுப்பான நாசு அடிப்படை கட்டமைப்பு தலைமையகத்தின் ஒருங்கிணை பிரிவின் தலைவர் சி தா ச்சீரேன் இவ்வாறு கூறினார்.
நாசு பகுதியில் ஏற்படுத்திய மாற்றம் ஒரு குழுவுடன் பிரிக்க முடியாது. அதாவது திபெத்திற்கு உதவும் ஊழியர்கள். 2013ஆம் ஆண்டு முதல் திபெத்திற்கு உதவி செய்ய துவங்கியுள்ள 7வது நடவடிக்கையில், ச்சே சியாங் மாநிலம் 55 திறமைசாலிகளையும், லியாவ் நீங் மாநிலம் 54 ஊழியர்களையும் அனுப்பியுள்ளன. அவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளிலுள்ள நிபுணர்களாவர். அவர்கள் நாசு நகரக் கட்டுமானத்திற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.
ச்சே சியாங் மாநிலத்தைச் சேர்ந்த சென் யூன் சொங், நாசு உதவி பணித்திட்டத்தின் உருவாக்குதல், செயல்படுத்துதல், திட்டம் ஏற்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் ஈடுபடுத்துகிறார். திபெத்திற்கு செல்லும் முன் அவரின் உடல் நிலை நன்றாக இருந்தது. திபெத்திற்கு சென்ற பிறகு உடல் பரிசோதனையில் 15 நிகழ்ச்சிகள் வரையறைக்குப் பொருத்தியத்தல்ல.