20 ஆண்டுகளாக ச்சே சியாங் மற்றும் லியாவ் நீங் மாநிலங்கள் நாசுவுக்கு உதவி செய்து வருகின்றன. இக்காலத்தில் திபெத்திற்கு உதவும் ஊழியர்கள் பலர் கண்களை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளனர். அவர்களை பற்றி கூறும்போது, நாசு நிர்வாக பகுதியின் துணை ஆணையர் ஓகா கூறிதாவது:
கிழக்கு பகுதிகளிலிருந்து வந்த திபெத்திற்கு உதவும் ஊழியர்கள் திபெத் சகோதரர்களுடன் இணைந்து முயற்சி செய்கின்றனர். எல்லை பகுதியை உறுதிப்படுத்துவது, இன ஒற்றுமை, நாட்டின் செழுமை ஆகியவற்றுக்காக, அவர்கள் தங்கள் இளமையை திபெத்திற்கு கொடுத்துள்ளனர். முழு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்றார் ஓகா.