வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் சொந்த செலவில் சாலையைக் கட்டியமைத்து கிராமத்தை செழுமைப்படுத்தும் திபெத் இன விவசாயி சினதிங்ச்சு பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் ஈஸ்வரி.
நீங்கள் கேட்டு கொண்டிருக்கின்ற பாடலின் பெயர், மலையிலிருந்து வந்தவர். இப்பாடல், சினதிங்ச்சுக்காக சிறப்பாக எழுதப்பட்டது. அவர், பாலாகெச்சுங் சுற்றுலா நிறுவனத்தின் தலைமை மேலாளர். சொந்த செலவில் சாலையைக் கட்டியமைத்து, மலையிலுள்ள ஊரில் சுற்றுலா தொழிலை வளர்க்கின்ற கதையால் அவர் புகழ் பெற்றார்.
50 வயதான சினத்திங்ச்சு, மலையிலான தொலைதூரமான பாலா கிராமத்தில் பிறந்தார். கடந்த பல ஆண்டுகளில், கிராமவாசிகள் மலைக்கு வெளியே போக வேண்டுமானால், Narrow சிறிய சாலையில் நடந்து செல்ல வேண்டும். நகர பகுதிக்கு போய் 3 நாட்கள் நடக்க வேண்டும். சினதிங்ச்சு நினைவுகூர்ந்து கூறியதாவது
நான் குழந்தை பருவத்தில் கடையைக் கூட பார்க்கவில்லை. சாலையில்லாமல், இங்குள்ள கிராமவாசிகள் நோய்வாய்பட்டால் மருத்துவமனைக்கு போக முடியாது. மிக கடினம் என்று அவர் கூறினார்.