9 வயதின் போது, தந்தையுடன் அவர் நகரப்பகுதிக்குப் போனார். அவர் முதல்முறையாக காரை பார்த்தார். அப்போது முதல் அவரது மனதில் ஒரு கனவு உதித்துள்ளது. அதவாது, கிராமவாசிகளுக்கு வெளியுலகத்தைக் காட்டுவது தான்.
அப்போது நான் யோசித்தேன், எப்போது காரில் எனது ஊருக்குப் போகலாம் என்று. இது எனது கனவாகும். எனது கிராமவாசிகள், வெளியுலகத்தை அறியலாம். அதனால், கிராமத்தில் சாலையைக் கட்டியமைக்க நான் எனது ஆயுள் காலத்தை செலவிட்டேன் என்றார் அவர்.
13 வயதில், சினதிங்ச்சு வெளியூருக்குப் போய் வேலை செய்தார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்ததன் மூலம், அதிக செல்வத்தை சேமித்தார். 1999ஆம் ஆண்டு, சேமித்த பணத்தோடு, ஊருக்குத் திரும்பினார். மலையிலுள்ள கிராமத்தையும் நகர பகுதியையும் இணைக்கும் சாலையைக் கட்டியமைக்க முடிவெடுத்துள்ளார்.
இது நான் பிறந்த வாழ்ந்த ஊர். எனது ஊர், நான் எப்போதும் நினைக்கின்ற இடமாகும். இங்குள்ள மலையும் பள்ளத்தாக்கும், எனக்கு சிறப்பான உணர்ச்சியை வழங்கியுள்ளன.