புகழ்பெற்ற கடல் பயணியர்களான மார்கோ போலோ (இத்தாலி), இபின் பட்டுடா (மொராக்கோ) உள்ளிட்டவர்கள் கூறுவது என்னவென்றால், "ஜுவாங்ஜோ துறைமுகம், உலகிலேயே அதிக வர்த்தகம் நடைபெறும் இடம்" என்று சான்றளித்துள்ளனர்.
இஸ்லாம்:சீனா என்றாலே கம்யூனிசம் என்பதுதான் வெளி உலகுக்கு தெரியும். ஆனால், இங்கு பல்வேறு மத, இன மக்களும் ஒருமைப்பாட்டுடன் வசித்து வருகின்றனர் என்று ஜுவாங்ஜோவில் பயணம் மேற்கொண்டால் தெளிவு பிறந்து விடும். சீனாவில் முதன் முதலாக இஸ்லாமிய மதம் தரைவழியாகப் பரவியது உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் என்றால், கடல்வழியாகப் பரவியது ஜுவாங்ஜோ வழியாகத்தான்.