அனைத்து துறைகளிலும் மனித குலம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ள இக்காலத்திலும், மதம், இனத்துக்காக உலகின் பல்வேறு பகுதியினர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், எந்தவித அறிவியல் வளர்ச்சி அற்ற காலத்தில் அனைத்து பிரிவு மக்களும் ஒற்றுமையாக வாழும் இடமாக ஜுவாங்ஜோ விளங்கியுள்ளது. வரலாற்றை திருப்பிப் பார்ப்பதன் மூலம், வரலாற்றை அறிவதுடன் அது கூறும் சாந்தமான கதைகள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு உலகில் இருக்கும் பல சாட்சிகளில் ஜுவாங்ஜோவும், அந்நகர மக்களும் ஒரு சாட்சிகள்.