இதையடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க சிறுநகர் ஒன்றைப் பற்றி உங்களுக்குக் கூற விரும்புகிறேன். அதன் பெயர் ஃபுங்ஜிங். இச்சிறுநகர் 1500க்கும் மேலான ஆண்டுகள் வரலாறுடையது. ஷாங்காய் மாநகர் மற்றும் சேன்ஜியாங் மாநிலத்தை ஒட்டியமைந்த பகுதியில் ஃபுங்ஜிங் நகர் அமைந்துள்ளது. நான்கு திசைகளிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. நகரிலும் நிறைய நதிகள் உள்ளன. அதனாலே மூன்று காலடிக்கு இரண்டு பாலங்களைக் காணலாம் என்ற பழமொழி உருவானது. அங்குள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் வெள்ளை சுவருடன் நீலம் கருப்பு நிறங்களிலான கூரைகள் இருக்கும். மிங் மற்றும் ஜிங் வம்சக் காலத்தில் கட்டிடக் கலை பாரம்பரியமாகும். இத்தகைய அழகு மிக்க காட்சியைத் தவிர, ஓவிய அரங்கு, கைவினைப் பொருள் பணியகம், பழங்காலத்தின் பாரம்பரிய வீடு முதலியவற்றையும் கண்டுரசிக்கலாம். சிறப்பு உணவுகள் பலவற்றையும் சாப்பிடலாம். ஃபுங்ஜிங் நகருக்குள் நுழைய, நுழைவுச்சீட்டு 50யுவானாகும். வேறு சிறுநகரங்களுடன் ஒப்பிடும் போது, ஃபுங்ஜிங் நகரில் அதிக அளவில் வணிகச் சூழல் இல்லை. மனநிலையைத் தளர்த்த, ஃபுங்ஜிங் நகர் தலைசிறந்த இடமாகும்.