இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், ஷாங்காய் மாநகரிலுள்ள வெனிஸ் என வெகுவாகப் பாராட்டப்பட்ட நீர் நகரான ஸுஜியாஜியோ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். ஷாங்காயின் நான்கு வரலாற்று சிறப்பு மிக்க சிறுநகரங்களில் அதுவும் ஒன்றாகும். இந்த நீர் நகர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறுடையது. அதன் உருவம் சிறப்பானது. விசிறி போல இருக்கும். இந்நகர் நீர் மற்றும் பாலத்துக்குப் புகழ் பெற்றது. இந்நகரில் 36 பாரம்பரிய பாலங்கள் நன்றாகப் பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. மிங் மற்றும் ஜிங் வம்சக் காலத்தின் ஆயிரக்கணக்கான கட்டிடங்களும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. அது செயற்கை அழகல்ல. ஸுஜியாஜியோ நகரில் இயற்கை அழகைக் கண்டுரசிக்கலாம். இயற்கையுடன் மேலும் இணக்கமாகலாம். அங்கு கப்பலில் பயணம் மேற்கொள்வது தலைசிறந்த தேர்வாகும். ஓவியத்தில் இருப்பதைப் போல உணர்வைப் பெறலாம்.
இயற்கை அழகு மட்டுமல்ல, அங்கு நிறைய கோயில்களும் பூங்காக்களும் உள்ளன. குழந்தைகளுடன் பயணம் மேற்கொண்டால், அங்கு நீர் விளையாட்டரங்கில் பொழுதைக் கழிக்கலாம். பொதுவாகக் கூறினால், ஸுஜியாஜியோ நகரில் பயணம் மேற்கொண்டால், நீங்கள் கண்டிப்பாக மனநிறைவடைவீர்கள்.
சரி நண்பர்களே, இதுவரை, ஷாங்காய் மைய நகரின் சுற்றுப்புறத்திலுள்ள சில காட்சித்தலங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இத்துடன் இன்றைய சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. எப்படி, பிடித்திருந்ததா?நிகழ்ச்சி பற்றி ஏதேனும் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலை நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.