அடுத்து, சீனாவில் விவசாயிகளின் ஓவியக் கிராமம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எப்படி, இந்தத் தலைப்பைக் கேட்கும் போது ஆர்வமும், வியப்பும் வருகிறது அல்லவா?ஷாங்காய் மாநகரின் ஜின்ஷேன் பிரதேத்திலுள்ள சூங்ஹூங் கிராமத்தில், இந்த ஓவியக் கிராமம் அமைந்துள்ளது. சாயம், மரச்சிற்பம், பூத்தையல், காகித கத்தரிப்பு முதலிய பாரம்பரிய கலை நுட்பம் ஓவியத்துடன் இனிதே ஒன்றிணைத்துக் காணப்படும் தனிச்சிறப்பு மிக்க கலை முறை அங்கு தோன்றியுள்ளது. யாங்சி ஆற்றின் தெற்கிலுள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் உழைப்பின் பழக்க வழக்கங்களை கலைஞர்கள் உயிர்த்துடிப்புடன் வெளிக்காட்டியுள்ளனர். ஜின்ஷேன் விவயாயி ஓவியம் என இத்தகைய ஓவியம் அழைக்கப்படுகிறது. சீனா மட்டுமல்ல, உலகிலேயே அது பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜின்ஷேன் விவயாயி ஓவியங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார்.