சீனாவில் புகழ் பெற்ற வழக்க மொழி ஒன்று உள்ளது. அதாவது, ஜியுசையிலிருந்து திரும்பினால், இனி, பிற நீர் காட்சிகளைப் பார்க்க வேண்டாம். அதன் காரணம் என்ன என்று நான் கூறுகிறேன். நீர் ஜியுசைகோ காட்சித்தலத்தின் திறவுகோலாகும். அங்கு நூற்றுக்கு அதிகமான ஏரிகள் பாய்ந்து ஓடுகின்றன. அதனால் இக்காட்சித்தலம் ஆண்டு முழுவதும் நீல வண்ணத்தில் காட்சி அளிக்கும். ஒளி மற்றும் பருவகாலத்திற்கு ஏற்ப, வெவ்வேறான வண்ணங்களில் ஏரிகள் பளிச்சிடும். நீல வண்ணமான வானம், வெள்ளை மேகங்கள், தொலைவிலுள்ள மலைகள், அருகிலுள்ள மரங்கள் ஆகியவை ஏரிகளில் பிரதிபலிக்கும் இக்காட்சி பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்.