• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகள் முதல் வட பகுதிகளில் மழை அளவு, படிபடியாக குறைந்து வருகிறது. வறட்சியால், நிலத்தடி நீரின் கையிருப்பு, மிக தாழ்வான நிலையை எட்டி விடும். மேலும் நெருக்கமாக வளர்ந்த வேளாண்துறை, விரைவான நகரமயமாக்க வளர்ச்சி, கடும் நீர் மாசுப்பாடு ஆகியவை, அப்பிரதேசங்களின் நீர் வழங்கல் பிரச்சினையைத் தீவிரமாக்குகின்றன. எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாவிட்டால், 2030ஆம் ஆண்டு வரை வட பகுதியில் நீர் வழங்கல் முற்றிலுமாக நின்று போகக் கூடுமென அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஹுவா பே மின்னாற்றல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ZhangHuaYong கூறியதாவது

"சீனாவின் வட பகுதியில் நீர்வளப் பற்றாக்குறை, உள்ளூர் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பாதிப்பு விளைவித்துள்ளது. அப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது."என்று அவர் தெரிவித்தார்.

எனவே இதற்கு ஒரு பெரிய அளவிலான தீர்வாக, நீரை தெற்கிலிருந்து வடகிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது நீரை எடுத்துச்செல்வதன் அமைப்பு முறையைக் கட்டியமைத்து, பல்லாயிர கோடி கனலிட்டர் நீரை, தென் பகுதியிலிருந்து வறண்ட வட பகுதிக்கு அனுப்ப வேண்டும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040