• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணி
  2013-09-10 14:31:54  cri எழுத்தின் அளவு:  A A A   

2002ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் இத்திட்டப்பணி துவங்கியது. நீரை எடுத்துச்செல்வதில் மூன்று நெறிகள் செயல்படுகின்றன. மேற்கு நெறி, வட மேற்கு பகுதியிலுள்ள யாஞ்சி ஆற்றிலிருந்து நீரை எடுத்து, வட பகுதியின் மஞ்சள் ஆற்றுக்கு அனுப்புகிறது. 1276 கிலோமீட்டர் நீளமான மத்திய நெறியும், கிழக்கு நெறியும் முறையே ஹன் ஆற்றிலிருந்து, யாஞ்சி ஆற்றின் கீழ் பகுதியிலிருந்து, நீரை எடுத்து, பெய்ஜிங், தியன்ஜின், சீனாவின் வட கிழக்கு பகுதி முதலிய பிரதேசங்களுக்கு அனுப்புகின்றன. உலகில் மிக பெரிய ஆற்றின் நீர் அளவை விட, இத்திட்டப்பணி மூலம் ஆண்டுதோறும் எடுத்துச்செல்லும் நீர் அளவு 570 மடங்காகும்.

இத்திட்டப்பணி முன்வைக்கப்பட்ட பின் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிர்ப்போர் கருத்தில், அது அதிகமான மூலப்பொருட்கள் செலவான போதிலும், பொருளாதாரப் பயன் எப்படி இருக்கும் என்பது தெரிய வில்லை. குறைந்த நீர் அனுப்பினால், பொருளாதாரப் பயனை வெளிக்கொணர முடியாது. அதிகமான நீரை அனுப்பினால், வறட்சிக் காலத்தில் யாஞ்சி ஆற்றில் ஏற்படும் நீர் குறைவு, கால்வாயில் கப்பல் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். மேலும், ஆற்றுப்பள்ளத்தாக்கைக் கடந்த பெரிய திட்டப்பணி, யாஞ்சி ஆற்றுக் கரையோர இயற்கை உயிரினச் சுற்றுச்சூழலுக்குப் பாதகமான மாற்றங்களை விளைவிக்கக் கூடும். இது குறித்து சீனாவின் புகழ் பெற்ற நீர் சேமிப்பு நிபுணர் ZhangGuangDou கூறியதாவது:

"நீரை தெற்கிலிருந்து வடக்கிறகு எடுத்துச்செல்வது, நடைமுறையின்படி வகுக்கப்பட்டது. அது பெருமளவிலும் சிக்கலாகவும் நடைபெற்ற போதிலும், வட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு இது நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்."என்று ZhangGuangDou தெரிவித்தார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040