யுன்ஷான்பிங், யுலோங் பனி மலையின் கன்னிக்காட்டில் மறைந்திருக்கும் புல்நிலமாகும். நாசி இன மக்களின் மனதில் அது புனித இடமாகும். நாசி இனத்தின் முதலாவது ஜோடி காதலரான காய்மெய் மற்றும் யூலெபாய்யின் சுதந்திரக் காதல் கதை இங்கே பரவி வருகிறது. நாசி இனத்தின் செவிவழி கதையில் கூறப்படும் 3வது யுலோங் நாட்டின் நுழைவாயிலாக அது கருதப்படுகிறது. யுன்ஷான்பிங், யுலோங் பனி மலையின் முக்கிய சிகரத்தின் கீழுள்ள வலது பக்கத்தில் அமைந்துள்ளது. ஈர்ப்பாற்றல்மிக்க இந்த அமைதியான இடத்தில் பசுமையான புல் மற்றும் அழகான மலர்கள் வளர்கின்றன. ஆண்டுதோறும் தீப விழாவின் போது, சுற்றுப்புறத்தில் வாழும் இளைஞர்களும் இளம் பெண்களும் காய்மெய் மற்றும் யூலெபாய்யை அடையாளப்படுத்தும் காகித மனிதர்களைத் தயாரித்து, யுன்ஷான்பிங்கிற்கு வந்து நினைவு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.