சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள், மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டியின் உறுப்பினர்கள், மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆகியோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் முதலாவது முழு கூட்டத்தில் 23ஆம் நாள் தேர்வு செய்யப்பட்டனர்.
மார்ச் 7ஆம் நாள் முற்பகல், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங், சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளிநாட்டுறவு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்
சீனா பற்றி அமெரிக்காவின் கருத்து மற்றும் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. சீனாவை முக்கிய எதிரியாகவும் மிக கடுமையான அறைகூவலாகவும் அமெரிக்கா கருதுவதால் சீனாவின் மீதான அதன் கொள்கை அறிவார்ந்த சரியான பாதையிலிருந்து விலகிச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டி அரசியல் குழு, 25ஆம் நாள் கூட்டம் நடத்தி, கட்சி மத்திய கமிட்டியின் மைய மற்றும் ஒருங்கிணைந்த தலைமையை வலுப்படுத்திப் பேணிக்காப்பது பற்றிய விதிகள், கட்சியின் 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான விதிகள் முதலியவற்றைப் பரிசீலனை செய்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் 24ஆம் நாள் பிற்பகல் சீன இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அக்டோபர் 23ஆம் நாள் பிற்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங்கிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகின் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசுத் தலைவர்கள், சமூக வட்டாரத்தினர்கள் முதலியோர், சிபிசி 20ஆவது தேசிய மாநாடு நடைபெற்றது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
22ஆம் நாள் நிறைவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனம் (திருத்தம்)அங்கீகரிக்கப்பட்டது. புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் புதிய சிந்தனை, இத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
“மிகப் பரந்துபட்ட சீன மக்களின் அடிப்படை நலன்களைப் பேணிகாத்து வளர்க்க வேண்டும். மக்கள் மிகவும் அக்கறை கொண்ட அடிப்படை நலன்களில் கருத்தில் கொள்ள வேண்டும். பொது சேவைகளின் சமநிலை மற்றும் அணுகலை வலுப்படுத்தி கூட்டுச் செல்வத்தைப் பயனுள்ள முறையில் முன்னேற்ற வேண்டும்.”என்று 16ஆம் நாள் துவங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
தூய்மையான நீர் மற்றும் பசுமையான மலை, தங்கம் மற்றும் வெள்ளியைப் போன்றவை என்ற கருத்தைப் பின்பற்ற வேண்டும். மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழும் பார்வையுடன் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும் என்று ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 22ஆம் நாள் காலை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 22ஆம் நாள் காலை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இந்நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் முதலாவது முழு கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் 23ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்திபார்கள்.
புத்தாக்க வளர்ச்சியின் நெடுநோக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
3ஆவது நேர்காணல் நிகழ்ச்சியில், ஷான்டோங், ஹேநான், ஹுபெய், ஹுநான், குவாங்டோங், குவாங்சி, ஹாய்நான் ஆகிய 7 பிரதிநிதிக் குழுக்களின் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் மேலாண்மைக்கு நிலையான விதி உண்டு. மக்களுக்கு நலனளிப்பது அதன் அடிப்படை. மிக அருமையான வாழ்க்கைக்கு நாம் கூட்டாகப் பாடுபடுவோம் என்று ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கையில், உயர்தர வளர்ச்சியே, நவீன சோஷலிச நாட்டின் பன்முகக் கட்டுமானத்தில் முதன்மைப் பணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 16ஆம் நாள் துவங்கியது. அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், பன்முகங்களிலும் முழு நடைமுறை மக்கள் ஜனநாயகத்தின் சிறப்பியல்பு மற்றும் சாதகத்தை விளக்கிக் கூறினார்.
தொழில் சங்கிலியின் மேன்மையிலிருந்து எங்களுக்கு நம்பிக்கை வருகிறது என்று ஜியாங்சூ மாநிலத்தின் குன்ஷான் நகரக் கட்சிக் குழுச் செயலாளர் சோ வெய் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட திபெத் பிரதிநிதிக் குழுவுடன் தோழர் வாங் யாங், 17ஆம் நாள், 20ஆவது தேசிய மாநாட்டுக்கான அறிக்கை பற்றி விவாதித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. தோழர் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கை வழங்கினார்.
ஒவ்வொரு நாடும் சொந்த நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப உரிய நவீனமயமாக்க பாதையைக் கண்டுபிடித்து மாபெரும் வளர்ச்சியை நனவாக்க முடியுமென சீன நவீனமயமாக்கத்தின் வெற்றி காட்டியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் துவக்கத்தை முன்னிட்டு, உலகிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் நட்பார்ந்த பிரமுகர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
முழு நடைமுறை மக்கள் ஜனநாயகம், சோஷலிச ஜனநாயக அரசியலின் சாராம்சமாகும். இது மிகவும் விரிவான, உண்மையான மற்றும் பயனுள்ள ஜனநாயகம் என்று ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.
சுதந்திரமான அமைதியான தூதாண்மை கொள்கையைப் பின்பற்றி, சர்வதேச தொடர்புகளின் அடிப்படை விதிமுறையையும் நீதி மற்றும் நியாயத்தையும் சீனா பேணிக்காத்து வருகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் விதம், பிரதிநிதிகள் அனைவரும் பெய்ஜிங்கை 14ஆம் நாள் வரை வந்தடைந்து பதிவு செய்துள்ளனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான செய்தியாளர் சந்திப்பு 2022ஆம் ஆண்டு ஆக்டோபர் 15ஆம் நாள் சனிக்கிழமை மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பொருளாதார மொத்த தொகை 2012ஆம் ஆண்டில் இருந்த 53 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2021ஆம் ஆண்டில் இருந்த 1 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது.
நகரப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதிகள் ரீதியிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், சீன மத்திய அரசு மொத்தமாக 40 ஆயிரம் கோடி யுவானுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் நடைபெறத் தொடங்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, 7ஆவது முழு அமர்வுக் கூட்டத்திடம் முன்மொழியவுள்ளது.
சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியில், மொத்தம் 9 கோடியே 89லட்சத்து 90ஆயிரம் மக்கள் தீவிர வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 96 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வறுமை ஒழிப்பின் இடமாற்ற திட்டத்தின் மூலமாக வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மையம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு 20ஆவது தேசிய மாநாடு குறித்து செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஆதரவுச் சேவை வழங்கி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீனாவில் பல்வேறு நிலை கல்விக்கான பரவல் அளவு, நடுத்தர மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளின் சராசரி நிலையை அடைந்துள்ளது அல்லது தாண்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, திபெத் தன்னாட்சிப் பிரசேத்தில் 525 திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை 68 ஆயிரத்து 260 கோடி யுவானாகும்.